வீடு வாடகை தகராறில் சுடு தண்ணீர் பானையில் தள்ளி 2 வயது குழந்தை கொலை
வீடு வாடகை தகராறில் 2 வயது குழந்தை சுடு தண்ணீர் பானையில் தள்ளி கொலை செய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தா
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகில் உள்ள உத்தடங்காவை சேர்ந்த திபன்விதா புனியா என்பவருக்கு ராஜ்குமாரி ஷா என்பவர் நீண்ட காலமாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை. இது தொடர்பாக நீண்ட நாட்களாக புனியாவுக்கும் ராஜ் குமாரிக்கும் தகராறு இருந்து வந்தது.
கடந்த 14 ந்தேதி இந்த தகராரு மோதலாக மாறியது அப்போது ராஜ்குமாரி திபன்விதாவை பிடித்து தள்ளி உள்ளார். இதில் திபன்விதா தனது 2 வயது குழந்தையுடன் கொத்திக்கும் நீர் பானையில் விழுந்தார். இதில் இருவரும் படுகாயம் அடைந்து கொல்கத்தாவின் என்.ஆர்.எஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி திபன்விதாவின் குழந்தை பலியானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.