மருத்துவ பரிசோதனைகளுக்காக மீண்டும் அமெரிக்கா செல்கிறார் மனோகர் பாரிக்கர்

கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மருத்துவ பரிசோதனைகளுக்காக மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளார்.

Update: 2018-08-29 05:57 GMT
பானஜி,

கணைய பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் ஏறக்குறைய மூன்று மாதம் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக்கொண்ட கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர், கடந்த ஜூன் மாதம் இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பியதும், உடனடியாக கோவா சென்று தனது பணிகளை மனோகர் பாரிக்கர் துவங்கினார். அவ்வப்போது, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வந்தார். 

இந்த மாதம் மீண்டும் அமெரிக்கா சென்ற மனோகர் பாரிக்கர், இந்தியா திரும்பிய மறுநாளே, (ஆக.23) மும்பை லீலாவதி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இன்று கோவா திரும்ப உள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் அமெரிக்க செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

எனினும், மனோகர் பாரிக்கரின் உடல் நிலை குறித்த எந்த தகவலையும் வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இன்று இரவு, மும்பையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்ல இருப்பதாக முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்