பா.ஜனதாவின் தேசிய செயற்குழு கூட்டம்
பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் நடக்கிறது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, பா.ஜனதா ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்–மந்திரிகள், துணை முதல்–மந்திரிகள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு, பட்டியல் இனத்தவருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், நாடாளுமன்றத்துக்கும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது ஆகிய பிரச்சினைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்படும் என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.