மகேந்திரகிரியில் பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றி - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

மகேந்திரகிரியில் பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-26 19:20 GMT

திருவனந்தபுரம்,

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்குரிய பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-


"மகேந்திரகிரியில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் இறுதிக்கட்ட பி.எஸ்.4 எஞ்சின் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவுகள் துல்லியமாக கிடைத்துள்ளன. எஞ்சின் பாகங்கள் உறுதியாக இருக்கின்றன. ராக்கெட்டின் எடையை குறைக்கும் வகையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன."


இவ்வாறு சோம்நாத் தெரிவித்தார். 


Full View


Tags:    

மேலும் செய்திகள்