”விநாயகர் சிலையில் காட்சி தந்த பாம்பு ” பக்தர்கள் , பக்தி பரவசத்துடன் வழிபாடு
விநாயகர் சதுர்த்தியையொட்டி, தெலுங்கானா மாநிலம் ஜெகத் மாவட்டத்தில் கொத்தமங்கலம் கிராமத்தில் விநாயகர் சிலை மீது நாகப்பாம்பு பக்தர்களுக்கு காட்சி தந்தது.
ஐதராபாத்,
விநாயகர் சதுர்த்தியையொட்டி, தெலுங்கானா மாநிலம் ஜெகத் மாவட்டத்தில் கொத்தமங்கலம் கிராமத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. பூஜை முடிந்த பிறகு எங்கிருந்தோ அங்கு வந்த நாகப்பாம்பு , விநாயகர் சிலை மீது இருந்த படி பக்தர்களுக்கு காட்சி தந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் , பக்தி பரவசத்துடன் வணங்கி சென்றனர் .