சபரிமலை பிரச்சனையை அரசியலாக்க கூடாது - கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வரக்கூடாது என முன்னோர்கள் ஏன் கட்டுப்பாடு விதித்தார்கள் என்பது தெரியாது என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-17 13:47 GMT
பெங்களூர்,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வரக்கூடாது என முன்னோர்கள் ஏன் கட்டுப்பாடு விதித்தார்கள் என்பது தெரியாது என்று கர்நாடக முதல்-மந்திரி  தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பிரச்சனையை அரசியலாக்க கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார். இதனிடையே உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்று, அதனை அமல்படுத்த வேண்டும் என முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்