இந்திய ராணுவத்தில், முதல் முறையாக 3 புதிய ரக பீரங்கிகள்
இந்திய ராணுவத்தில், கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக புதிய ரக பீரங்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
நாசிக்,
1980களில் சுவீடன் தயாரிப்பான போபர்ஸ் பீரங்கிகள் ராணுவத்தில் இணைக்கப்பட்டன. இந்நிலையில், அமெரிக்க தயாரிப்பான எம்-777 அல்ட்ரா லைட் ஹோவிட்சர் (M777 Ultra-Light Howitzer) மற்றும் தென்கொரிய தயாரிப்பான கே9 வஜ்ரா-டி (K9 Vajra-T) ஆகிய பீரங்கிகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ தளபதி பிபின் ராவத் முன்னிலையில், இந்த பீரங்கிகள் ராணுவத்தில் இணைக்கப்பட்டன.
#WATCH Nasik: The M777 Ultra Light Howitzer which was inducted in the Army recently,in action. Defence Minister Nirmala Sitharaman and Army Chief General Bipin Rawat were also present on the occasion pic.twitter.com/2eZgP28QHb
— ANI (@ANI) November 9, 2018