காஷ்மீர்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து 11 பேர் பலி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகினர்.

Update: 2018-12-08 07:03 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்திலிருந்து லோரன் என்ற பகுதியை நோக்கி பேருந்து  ஒன்று சென்று கொண்டிருந்தது. மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து,  வழியில், ப்ளேரா என்ற இடத்தில், சாலையில் இருந்து விலகி, பெரிய பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில்  11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.  காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் பலரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்