சபரிமலை விவகாரம்: முதல்வர் வீடு நோக்கி பேரணியாக சென்ற பா.ஜனதாவினரை போலீஸ் விரட்டியது

சபரிமலை விவகாரம் தொடர்பாக பினராயி விஜயன் வீடு நோக்கி பேரணியாக சென்ற பா.ஜனதாவினரை போலீஸ் விரட்டியது.

Update: 2018-12-09 11:23 GMT
திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பை அமல்படுத்தும் முயற்சியில் கேரள மாநில அரசு இறங்கியது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சபரிமலையின் பாரம்பரிய விதிகளை சீர்குலைக்க கூடாது என்று அய்யப்ப பக்தர்கள் கூறினர். மேலும் கேரள மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டாலும் சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என்று பெண்களும் ஆங்காங்கே திரண்டு உறுதிமொழி எடுத்தனர். பா.ஜனதாவும், இந்து அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியது. கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை விவகாரம் தொடர்பாக  பினராயி விஜயன் வீடு நோக்கி சென்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுப்பு அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது பா.ஜனதாவினர் தடுப்பை உடைத்து உள்ளே செல்ல முயற்சி மேற்கொண்டனர். இந்நிலையில் போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சு அடித்தும் பா.ஜனதவினரை விரட்டினர். இச்சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்