காஷ்மீர்: பயங்கரவாதிகளால் 4 போலீசார் சுட்டுக்கொலை

காஷ்மீரில், பயங்கரவாதிகளால் 4 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Update: 2018-12-11 18:47 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ஷனிபோரா என்கிற இடத்தில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இங்கு நேற்று காலை 4 போலீசார் பணியில் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் போலீஸ் சோதனை சாவடிக்குள் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்து போலீசாரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தள்ளி விட்டு, அவர்களிடம் இருந்து துப்பாக்கிகளை பறித்துக்கொண்டு தப்பினர்.

குண்டு பாய்ந்ததில் போலீசார் 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்றொரு போலீஸ்காரரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில் அவரும் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்