துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிருக்கு போராடிய மாணவி : வீடியோ எடுத்த மக்கள்

உத்தரபிரதேச மாநிலம் யமுனா நகரில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், உயிருக்கு போராடிய மாணவியை, காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-12-13 08:17 GMT
யமுனா

உத்தரபிரதேச மாநிலம் யமுனா நகரை சேர்ந்தவர் ஜூலி.  9-ம் வகுப்பு படித்து வருகிறார்.  ஜூலியை திபு என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்தார். ஜூலி அவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த திபு ஜூலியை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். நான்கு குண்டுகள் பாய்ந்த நிலையில், மாணவி தன்னை காப்பாற்றுமாறு கதறுகிறார். ஆனால் சுற்றி நின்ற மக்கள், செல்போனில் வீடியோ எடுப்பதில் கவனமாக இருந்த‌தால், மாணவி சிறிது நேரத்தில் சுய நினைவை இழந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மேலும் செய்திகள்