ஒடிசாவின் சண்டிபூரில் அக்னி 4 ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது
ஒடிசாவின் சண்டிபூரில் அக்னி 4 ஏவுகணை இன்று காலை பரிசோதனை செய்யப்பட்டது.
சண்டிபூர்,
ஒடிசா கடலோர பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானியான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரில் தீவு ஒன்று அமைந்துள்ளது.
இங்குள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தின் 4வது தளத்தில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் அக்னி 4 ஏவுகணை விண்ணில் ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து செல்ல கூடிய ஆற்றல் வாய்ந்தது. இதேபோன்று அணு சக்தி ஆயுதங்களை ஏந்தி செல்லும் திறன் பெற்றது.