மேற்குவங்க அரசின் முக்கிய தகவல்களை மத்திய அரசிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் - மம்தா பானர்ஜி

மேற்குவங்க அரசின் முக்கிய தகவல்களை மத்திய அரசிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அரசு அதிகாரிகளை அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2018-12-29 15:37 GMT
கொல்கத்தா,

மேற்குவங்க மாநிலத்தின் சவுத் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அரசு அதிகாரிகளிடம்  மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்திய மம்தா பானர்ஜி அப்போது அரசு அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார்.

அலோசனை கூட்டத்தில் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது:

மேற்குவங்கத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் தகவல்களை பயன்படுத்திக் கொள்ளும் மத்திய அரசு, அவர்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை. மத்திய அரசை போல மாநில அரசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான். 

அனைத்து மாநில அரசுகளின் தகவல்களை அணுகும் மத்திய அரசு அதனை அரசியல் ரீதியாக பயன்படுத்துகிறது. மாநில அரசுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள மாநில அரசின் போர்டலில் அனைத்து தகவல்களையும் சேகரித்து கொள்ளலாம் என்றும் தகவல் சேகரிப்பு காரணத்தை காட்டி மத்திய அரசிற்கு முக்கிய தகவல்களை அனுப்ப வேண்டாம் எனவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் உள்ள தகவல்களை கண்காணிக்க, நுண்ணறிவு பிரிவு(ஐ. பி.), அமலாக்கத் துறை, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, வருவாய் புலனாய்வுத் துறை, ரா விசாரணை அமைப்பு, தில்லி காவல் துறை, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு விசாரணை அமைப்பு ஆகிய 10 விசாரணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம்  அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்