தமிழகம் காக்கப்பட வேண்டுமென்றால், மேகதாது அணை கூடாது: தம்பிதுரை

தமிழகம் காக்கப்பட வேண்டுமென்றால், மேகதாது அணை கூடாது என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-03 09:40 GMT
புதுடெல்லி,

தமிழகம் காக்கப்பட வேண்டுமென்றால், மேகதாது அணை கூடாது என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இது குறித்து கூறியதாவது:- 

"உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல், மத்திய அரசு விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளது . தமிழகம் காக்கப்பட வேண்டுமென்றால், மேகதாது அணை கூடாது.   மேகதாது விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை.

விரிவான திட்ட அறிக்கைக்கு அளித்த அனுமதியை திரும்ப பெறும் வரை போராடுவோம். அதிமுகவில் எல்லாரும் தலைவர்கள் தான், நாங்கள் ஒன்றுபட்டு தான் இருக்கிறோம், கட்சியில் அனைவரும் சமம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்