டெல்லி தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்ததில் 9 பேர் சாவு

டெல்லி தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்ததில் 9 பேர் பலியாயினர்.

Update: 2019-01-04 20:45 GMT
புதுடெல்லி,

டெல்லியின் மேற்கே சுதர்சன் பார்க் பகுதியில் மின் விசிறி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு திடீரென தொழிற்சாலையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதனால் அந்த தொழிற்சாலையின் ஒரு பகுதி இடிந்து தரைமட்டமானது.

இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், போலீசார் அங்கு விரைந்து சென்று விடிய, விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்த ஒரு குழந்தை உள்பட 9 பேரின் உடல்கள் நேற்று காலை மீட்கப்பட்டன. மேலும் இந்த விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்