அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொது செயலாளராக திருநங்கை அப்ஸரா ரெட்டி நியமனம்
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொது செயலாளராக திருநங்கை அப்ஸரா ரெட்டி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் தேசிய மகளிர் அணி பொதுச்செயலாளராக திருநங்கை அப்ஸரா ரெட்டி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
பத்திரிகையாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பணியாற்றிய அனுபவமுள்ள இவர் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.
அதன்பின் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். இந்நிலையில், அவரை காங்கிரஸ் கட்சியின் தேசிய மகளிர் அணி பொதுச்செயலாளராக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நியமனம் செய்து உள்ளார்.