ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் - 2 ராணுவ வீரர்கள் பலி, 2 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

Update: 2019-01-11 17:59 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள ராஜோரி மாவட்டத்தில், நவ்ஷேரா செக்டாரில் உள்ள லாம் பகுதியில் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், ராணுவ வீரர்களை குறிவைத்து வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ மேஜர் உள்பட 2 வீரர்கள் பலியாகினர். மேலும் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்