தீவிரவாத தாக்குதல், ஊழல் இல்லை என்பதே மோடியின் முக்கிய சாதனை - நிர்மலா சீதாராமன் கூறுகிறார்

தீவிரவாத தாக்குதல், ஊழல் இல்லை என்பதே மோடியின் முக்கிய சாதனை என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Update: 2019-01-12 23:00 GMT
புதுடெல்லி, 

பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-

அனைத்து பா.ஜனதா நிர்வாகிகளும் 2 முக்கியமான சாதனைகளை பிரசாரம் செய்ய வேண்டும். 2014-ம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல் எதுவும் நடை பெறவில்லை. நாடு 5 ஆண்டுகளாக அமைதியாக உள்ளதை மக்களுக்கு நினைவு படுத்த வேண்டும். எல்லையில் கூட எதிரி படைகள் நுழைய முயல்வது ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டு வருகிறது.

அதே அளவுக்கு முக்கியத்துவம் உள்ள மற்றொரு பிரச்சினை கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் என்பதே இல்லை. ஏன், ஊழல் தொடர்பான ரகசிய பேச்சு கூட பிரதமர் மோடி தலைமையிலான அரசில் இல்லை. எனவே சாதாரண மனிதன் அமைதியாகவும், ஊழலில் இருந்து தப்பியும் வாழ முடிகிறது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலும் செய்திகள்