சீக்கிய குரு பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி

சீக்கிய குரு கோபிந்த் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு நாணயம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டு உள்ளார்.

Update: 2019-01-13 06:36 GMT
புதுடெல்லி,

சீக்கிய மதத்தில் 10வது குருவாக வணங்கப்படுபவர் குரு கோபிந்த் சிங்.  இவர் தனது 9வது வயதில் சீக்கியர்களின் தலைவரானார்.  ஒரு போர் வீரர், கவிஞர் மற்றும் தத்துவயியலாளர் என்ற பன்முக தன்மை கொண்ட இவரது பிறந்த நாள் இன்று சீக்கியர்களால் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்ரீ குரு கோபிந்த் சிங் ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு நான் அவரை வணங்குகிறேன் என தெரிவித்து உள்ளார்.

இதன்பின் குரு கோபிந்த் சிங்கின் நினைவாக நாணயம் ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டு உள்ளார்.  இதற்காக டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்