சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமனத்திற்கு எதிர்ப்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Update: 2019-01-14 11:31 GMT
புதுடெல்லி

சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை பிரதமர் மோடி, சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.கே.சிக்ரி அடங்கிய உயர்மட்ட தேர்வுக்குழு நீக்கம் செய்ததை அடுத்து, அவர் தீயணைப்பு துறைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அந்தப் பதவியை ஏற்காமல் அலோக்வர்மா ராஜினாமா செய்தார்.

இடைக்கால சிபிஐ இயக்குனராக கூடுதல் இயக்குனர் பொறுப்பு வகித்த நாகேஷ்வரராவ் மீண்டும் பணியமர்த்தப்பட்டார்.

இந்த நடவடிக்கைக்கு எதிராக அரசு சாரா நிறுவனம் ஒன்று, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மூலம் சுப்ரீம் கோர்ட்டில்  வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்