சுப்ரீம் கோர்ட்டில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, நீதிபதி சஞ்சய் கன்னா ஆகியோர் பதவியேற்றனர்.

Update: 2019-01-18 22:42 GMT

புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியமானது, கடந்த 10–ந் தேதி அன்று கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, மற்றும் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சஞ்சய் கன்னா ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமனம் செய்ய பரிந்துரை செய்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதன் அடிப்படையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, நீதிபதி சஞ்சய் கன்னா ஆகியோர் பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்