காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் சாவு

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக பலியாயினர்.

Update: 2019-02-02 19:39 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீரின் பல பகுதிகளில் தொடர்ந்து பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனித்துகள்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை அகற்றும் பணியில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அந்தவகையில் அனந்த்நாக் மாவட்டத்துக்கு உட்பட்ட பகல்காம்-ஆறு சாலையில் கொட்டிக் கிடந்த பனித்துகள்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். இதற்கான எந்திரம் ஒன்றில் 4 பேர் இருந்தனர். அப்போது திடீரென அப்பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது.பல டன் எடை கொண்ட பனிக்கட்டிகள் அந்த எந்திரம் மீது விழுந்து அழுத்தின. இதில் பனிக்கட்டிகளுக்கு அடியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

மேலும் செய்திகள்