மோடியை தாக்கி கவிதை எழுதிய மம்தா பானர்ஜி
ஜனநாயகத்தை காக்கும் விதமாகவும், மோடியை தாக்கியும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுதிய கவிதை, இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுடெல்லி,
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பன்முக திறமை கொண்டவர். பாட்டு பாடுவார், ஓவியம் வரைவார், இசைக்கருவிகளை மீட்டுவார். 80-க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடியை தாக்கி, அவர் 'சாவி' என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். 18 வரிகள் கொண்ட இக்கவிதை இன்றைய பார்வையில் ஜனநாயகத்தை காப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்துகிறது.
கவிதையில், எவ்வாறு எல்லோரின் உதடுகளும் பூட்டப்பட்டிருக்கின்றன, இந்த அமைப்பு (பாஜக) எப்படி ஜனநாயகத்தை இக்கட்டான சூழலில் தள்ளுகிறது என்று மம்தா விவரிக்கிறார்.
டெல்லியில் எதிர்க்கட்சிகளின் தர்ணாவுக்கு சிறிது நேரம் முன்பாக மம்தா இதை எழுதியுள்ளார். அவரின் கைப்பட எழுதப்பட்ட கவிதை, முதல் முறையாக அப்படியே டுவிட்டரில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரும், மற்ற எதிர்க்கட்சியினரும் இந்த கவிதையை வைரலாக்கி வருகின்றனர்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பன்முக திறமை கொண்டவர். பாட்டு பாடுவார், ஓவியம் வரைவார், இசைக்கருவிகளை மீட்டுவார். 80-க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடியை தாக்கி, அவர் 'சாவி' என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். 18 வரிகள் கொண்ட இக்கவிதை இன்றைய பார்வையில் ஜனநாயகத்தை காப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்துகிறது.
கவிதையில், எவ்வாறு எல்லோரின் உதடுகளும் பூட்டப்பட்டிருக்கின்றன, இந்த அமைப்பு (பாஜக) எப்படி ஜனநாயகத்தை இக்கட்டான சூழலில் தள்ளுகிறது என்று மம்தா விவரிக்கிறார்.
டெல்லியில் எதிர்க்கட்சிகளின் தர்ணாவுக்கு சிறிது நேரம் முன்பாக மம்தா இதை எழுதியுள்ளார். அவரின் கைப்பட எழுதப்பட்ட கவிதை, முதல் முறையாக அப்படியே டுவிட்டரில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரும், மற்ற எதிர்க்கட்சியினரும் இந்த கவிதையை வைரலாக்கி வருகின்றனர்.