தமிழக கேரள எல்லை பகுதியில் மாவோயிஸ்டுகளுடன் போலீசார் துப்பாக்கி சண்டை : ஒருவன் பலி

தமிழக கேரள எல்லை பகுதியில் மாவோயிஸ்டுகளுடன் போலீசார் நள்ளிரவில் நடத்திய துப்பாக்கி சண்டையில் ஒருவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டான்.

Update: 2019-03-07 06:14 GMT
சென்னை

தமிழக கேரள எல்லை பகுதியில் வயநாடு மாவட்டம் லக்கிடியில் உள்ள வைத்திரி பகுதியில், நேற்றிரவு தனியார் விடுதியில் புகுந்த மூன்று மாவோயிஸ்டுகள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பின்னர் தங்களை பிடிக்க கேரள அதிரடி படை போலீசார் வருவதை அறிந்த அவர்கள் வனப்பகுதிக்குள் தப்பியோடியுள்ளனர். மாவோயிஸ்டுகளை துரத்திச் சென்ற கேரள போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

பதிலுக்கு மாவோயிஸ்டுகளும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் மாவோயிஸ்டு ஒருவன் சுட்டு வீழ்த்தப்பட்டான். ஒருவனை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பியோடிய மற்றொருவனை தேடி வருகின்றனர்.

சுட்டு வீழ்த்தப்பட்டவன் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜலீல் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்