இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: 15 ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை மார்ச் 15 ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2019-03-11 08:24 GMT
புதுடெல்லி,

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், கடந்த வாரம் டெல்லி உயர் நீதிமன்றம்  ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்குத்தான் இரட்டை இலை சொந்தம் என்று தீர்ப்பளித்து டிடிவி தினகரன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன், சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை மார்ச் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்