ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி சஜ்ஜத் கான் டெல்லியில் கைது

ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி சஜ்ஜத் கான் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளான்.

Update: 2019-03-22 06:48 GMT
புதுடெல்லி,

புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி சஜ்ஜத் கான், டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முடாசீரின் நெருங்கிய கூட்டாளியாக கைது செய்யப்பட்டுள்ள சஜ்ஜத் கான் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். முடாசீர் இந்த மாத துவக்கத்தில் கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்