மத்திய பிரதேசத்தில் 2 ஆம்புலன்சுகள் மோதல்; கர்ப்பிணி உள்பட 5 பேர் காயம்

மத்திய பிரதேசத்தில் 2 ஆம்புலன்சுகள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் கர்ப்பிணி உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

Update: 2019-03-24 07:07 GMT
இந்தூர்,

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நேற்றிரவு கர்ப்பிணி ஒருவரை ஏற்றி கொண்டு ஆம்புலன்சு சென்று கொண்டிருந்தது.  இந்த நிலையில் எதிரே வந்த மற்றொரு ஆம்புலன்சு மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் கர்ப்பிணி உள்பட 5 பேர் காயமடைந்தனர்.  அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  அவர்கள் அனைவரும் ஆபத்து கட்டத்தினை கடந்து விட்டனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்