பஸ்சுடன் மோதிய கார் தீப்பிடித்ததில் 5 பேர் உடல் கருகி பலி

பஸ்சுடன் மோதிய கார் தீப்பிடித்ததில் 5 பேர் உடல் கருகி பலியாயினர்.

Update: 2019-03-30 21:00 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்-பரேலி தேசிய நெடுஞ்சாலையில் கமாரியா பாலம் அருகே நேற்று காலை ஒரு சுற்றுலா பஸ்சும், ஒரு காரும் பயங்கரமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் இருந்த 5 பேரும் கருகி பலியானார்கள். பஸ்சில் இருந்த 6 பயணிகளுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. விபத்தில் பலியான 5 பேரும் யார் என தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்