ஜம்மு காஷ்மீர்: புல்வாமா அருகே 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

Update: 2019-04-01 01:43 GMT
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லஸ்சிப்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இந்த தகவலின் பேரில், குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். 

இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில், பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர் -இ -தொய்பா இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் காயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

மேலும் செய்திகள்