டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-04-15 18:51 GMT
புதுடெல்லி,

டெல்லியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் முக்கியமானது காசியாபாத் ரெயில் நிலையம் ஆகும். அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நின்றிருந்தார். அப்போது அங்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்தனர். அதன்பின்னர் அவரை பாதுகாப்பு படையினர், டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்