லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்

லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2019-04-16 20:31 GMT
லக்னோ,

நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோ தொகுதியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக, மாநில துணை முதல்-மந்திரிகள் கேசவ பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா, பா.ஜனதா மூத்த தலைவர் கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் புடை சூழ வாகன பேரணியாக ராஜ்நாத் சிங் சென்றார். கலெக்டர் அலுவலகத்தை அடைந்து, அங்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

கட்சி தொண்டர்களிடையே பேசுகையில், நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக அவர் கூறினார்.

மேலும் செய்திகள்