மேற்கு வங்காள தேர்தல் சிறப்பு பார்வையாளர் நியமனம்: தினந்தோறும் அறிக்கை அனுப்புவார்

மேற்கு வங்காள தேர்தல் சிறப்பு பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டார். அவர் தேர்தல் கமிஷனுக்கு தினந்தோறும் அறிக்கை அனுப்புவார்.

Update: 2019-04-17 20:43 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்துக்கான தேர்தல் சிறப்பு பார்வையாளராக அஜய் வி.நாயக்கை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. இவர் நாளை (வெள்ளிக்கிழமை) கொல்கத்தாவுக்கு செல்கிறார். மேற்கு வங்காளத்தில் இன்னும் மீதம் உள்ள 5 கட்ட வாக்குப்பதிவை கண்காணித்து, தேர்தல் கமிஷனுக்கு தினமும் நேரடியாக அறிக்கை அனுப்புவார்.

அஜய் வி.நாயக், பீகார் மாநிலத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர். 1984-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர், கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார்.

மேலும் செய்திகள்