காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Update: 2019-04-20 20:04 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் வாட்டர்கேம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

பின்னர் பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். அங்கிருந்த ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்