டெல்லி விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

டெல்லி விமான நிலையத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Update: 2019-05-09 02:09 GMT
புதுடெல்லி,

சிங்கப்பூரில் இருந்து டெல்லி வந்த எஸ்.கியூ 406 என்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 228 பயணிகளுடன் வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஏ 380- 800 ரக விமானம், சக்கரத்தின் முகப்பு பக்கத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர் என தெரிவிக்கப்பட்டது.  நேற்று இரவு 8.20 மணியளவில், ஓடுபாதை 28-ல் விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் பின்னர், வேறு ஓடுபாதைக்கு விமானம் இழுத்துச் செல்லப்பட்டது என்றும் டெல்லி விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.  இந்த விவகாரம் தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. 

மேலும் செய்திகள்