தோ்தல் ஆணையத்துக்கு மம்தா பானர்ஜி கடிதம்

வாக்குப்பதிவு அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2019-05-18 18:14 GMT
கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் வாக்குப்பதிவு அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேற்கு வங்காளத்தில் இறுதிக்கட்ட தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த தோ்தல் அமைதியாகவும், பாரபட்சமின்றியும், மத்திய அரசு மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் தலையீடு இல்லாமல் நடைபெறுவதை தோ்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். நாட்டின் கூட்டாட்சி அமைப்பையும், ஜனநாயக நிறுவனங்களையும் தோ்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்