செல்பி எடுக்க முயன்ற இளைஞரை கண்டு அரியானா முதல்வர் கோபம்
அரியானா முதல்வர் தன்னுடன் செல்பி எடுக்க முயன்றவரை ஓரமாக இழுத்துவிட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அங்கு தன்னை நோக்கி கையசைத்தவர்களைப் பார்த்து ரோஜா மலர்களை தூவியபடியே வந்தார்.
அப்போது அவரது சிவப்புக் கம்பள பாதையில் குறுக்கே நின்ற ஒருவர் தன்னுடன் செல்பி எடுப்பதைக் கண்டு ஆத்திரமடைந்தார். பின்னர் அந்த இளைஞரின் கையைப்பிடித்து ஓரமாக இழுத்துவிட்ட அவர் முறைத்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.