சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை பிரதமர் மோடி சந்தித்தார்.
பிஷ்கேக்,
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 2 நாட்கள் கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கேக் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கிர்கிஷ்தான் சென்றுள்ளார்.
இந்த மாநாட்டுக்கு இடையே, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்தார். சிரித்த முகத்துடன் இரு தலைவர்களும் கைகுலுக்கிக் கொண்டனர். சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இந்தியா உள்பட 8 நாடுகள் இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உறுப்பினராக உள்ளன.