ராஜஸ்தான்: லாரி கவிழ்ந்த விபத்தில் ஏழு பேர் பலி - 30க்கும் மேற்பட்டோர் காயம்

ராஜஸ்தானில் லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Update: 2019-06-23 18:01 GMT
சவாய் மாதோபூர்,

ராஜஸ்தானில் சவாய் மாதோபூரில் லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சவுத் கா பர்வாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவ்லி கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. மந்த்வாரா கிராமத்தில் நடக்க இருந்த திருமண விழாவில் கலந்து கொள்ள சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் பலியானவர்கள் பெரும்பாலும் பெண்கள் என்றும், படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்