சத்தீஷ்காரில் என்கவுண்ட்டர்; நக்சலைட்டு சுட்டு கொலை

சத்தீஷ்காரில் நடந்த என்கவுண்ட்டரில் ஒரு நக்சலைட்டு தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டான்.

Update: 2019-07-09 03:34 GMT
சத்தீஷ்காரின் சுக்மா நகரில் தபகொண்டா பகுதியில் மாவட்ட ரிசர்வ் காவலர் படையினர் நக்சலைட்டுகள் ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், நக்சலைட்டு தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான்.  அவனிடம் இருந்து ஐ.என்.எஸ்.ஏ.எஸ். ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது.  தொடர்ந்து நக்சலைட்டுகள் ஒழிப்பு வேட்டை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்