இந்தோனேசியாவில் தொடர்ந்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் தொடர்ந்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2019-07-15 13:13 GMT

 
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் மலுக்கு தீவில் உள்ள டெர்னடே நகரிரை நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவானது. இதனையடுத்தும் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 2 பேர் பலியாகி இருப்பது  தெரியவந்துள்ளது. 2000த்திற்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து 65 முறை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்