டெல்லியில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி கைது
டெல்லியில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரை சேர்ந்த பாஷிர் அகமது என்ற பயங்கரவாதியை பற்றிய தகவல் அளிப்பவருக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதியான பாஷிர் அகமதுவை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.