திருமணம் செய்த 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்தவர்

உத்தரபிரதேச மாநிலத்தில் கேட்ட வரதட்சணை தரவில்லை என்பதால் மனைவியை திருமணம் செய்த 24 மணிநேரத்தில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்த சம்பவம் நடந்துள்ளது.

Update: 2019-07-17 09:54 GMT
லக்னோ

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி அருகே ஜஹாங்கிர்பாத் பகுதியைச் சேர்ந்தவர் ஷாகே ஆலம். இவருக்கு கடந்த 13-ம் தேதி ருக்ஷனா பானு என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.

திருமண வரதட்சணையாக  மணமகனுக்கு மோட்டார் பைக்கை வாங்கி தருவதாக பெண் வீட்டார் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் கூறியபடி வாங்கி தரவில்லை.  இதைத் தொடர்ந்து கேட்ட வரதட்சணை தரவில்லை என்பதால் மனைவியை திருமணம் செய்த 24 மணிநேரத்தில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்தார். இதுகுறித்து  பெண்ணின் வீட்டார் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்