குல்பூஷன் ஜாதவுக்கு விரைவில் நீதி கிடைக்கும் - பிரதமர் மோடி

குல்பூஷன் ஜாதவுக்கு விரைவில் நீதி கிடைக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-17 16:10 GMT
புதுடெல்லி,

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது. ஜாதவுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். உண்மைகளை விரிவாக ஆய்வு செய்து தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பிலும், நலன் காக்கவும் மத்திய அரசு எப்போதும் செயல்படும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்