அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் முறையே முதல் மற்றும் 2வது இடங்களை பிடித்த தம்பதி

சத்தீஷ்காரில் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் கணவன் மற்றும் மனைவி முறையே முதல் மற்றும் 2வது இடங்களை பிடித்து ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளனர்.

Update: 2019-07-27 07:31 GMT
பிலாஸ்பூர்,

சத்தீஷ்காரின் பிலாஸ்பூர் நகரில் வசித்து வரும் தம்பதி அனுபவ் சிங் மற்றும் விபா சிங்.  இவர்கள் இந்த வருடம் நடந்த சத்தீஷ்கார் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் கலந்து கொண்டனர்.

அவர்கள் இருவரும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, முறையே முதல் மற்றும் 2வது இடங்களை பிடித்துள்ளனர்.  இதுபற்றி அந்த தம்பதி கூறும்பொழுது, நாங்கள் இன்று எவ்வளவு மகிழ்ச்சியுடன் உள்ளோம் என விவரிப்பது கடினம்.  நாங்கள் படிக்கும்பொழுது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக உதவி செய்து கொள்வோம் என கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்