இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது.

Update: 2019-07-29 05:40 GMT
ஷிம்லா, 

இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லாஹவுல் - ஸ்பிடி மாவட்டத்தில் இன்று காலை 9.03 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

 நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. 

மேலும் செய்திகள்