தெலுங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
தெலுங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்டு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி-கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு போலீசார் திருப்பி சுட்டதில், மாவோயிஸ்டு ஒருவர் பலியானார். மற்றவர்கள் அங்கிருந்து காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர்.
தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி-கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு போலீசார் திருப்பி சுட்டதில், மாவோயிஸ்டு ஒருவர் பலியானார். மற்றவர்கள் அங்கிருந்து காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர்.