உத்தரகாண்டில் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து : பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

உத்தரகாண்ட்டில் உள்ள தெஹ்ரி மாவட்டத்தில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளி வாகனம் ஒன்று விபத்துக்குள்ளனது.

Update: 2019-08-06 11:58 GMT
தெஹ்ரி,

இன்று காலை உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கார்வால் பகுதியில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளி வாகனம் ஒன்று ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் படுகாயமடைந்த 10 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் அனைவரும் கங்சாலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அனைவரும் 4 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்