சிறுவர்கள், பெண்களுடன் பிரதமர் மோடி கொண்டாடிய ‘ரக்‌ஷா பந்தன்’

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறுவர்கள், பெண்களுடன் இந்த விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்.

Update: 2019-08-15 23:45 GMT
புதுடெல்லி,

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ‘ரக்‌ஷா பந்தன்’ நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறுவர்கள், பெண்களுடன் இந்த விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்.

அப்போது அனைவரும் மோடியின் கைகளில் ராக்கி கயிறு கட்டி தங்களது வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

விழாவில் பங்கேற்றவர்களிடம், அனைவரின் பாதுகாப்புக்கும் எப்போதும் துணை நிற்பேன் என்று மோடி உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்