ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை விசாரித்து வந்த அதிகாரி ராகேஷ் அகுஜா டெல்லி போலீசுக்கு திடீர் மாற்றம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை விசாரித்து வந்த அதிகாரி ராகேஷ் அகுஜா டெல்லி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-08-22 10:15 GMT
புதுடெல்லி,

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை, அமலாக்கத்துறை சார்பில் விசாரித்து வந்த விசாரணை அதிகாரி ராகேஷ் அகுஜா திடீரென டெல்லி போலீசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.  இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில்,  அமலாக்கத்துறையில்  ராகேஷ் அகுஜாவின் பதவிக்காலம் 3 வாரத்திற்கு முன்பே முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவர் டெல்லி போலீஸ் பணிக்கு திரும்பி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்