நீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்

நீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி, ஏர்செல் வழக்குகளை நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் மாற்றியது.

Update: 2019-09-17 07:42 GMT
புதுடெல்லி,

நீதிபதி ஓபி சைனியிடம் இருந்து 2 ஜி, ஏர்செல் மேக்ஸிஸ் வழக்குகள் நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி சைனி இந்த  மாதம் இறுதியில் ஓய்வு பெற உள்ளதால்,  வேறு அமர்வுக்கு மாற்றி டெல்லி உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.  ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தொடர்பான ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை நீதிபதி அஜய்குமார் விசாரித்து வருகிறார்.  

மேலும் செய்திகள்